ரயில் பயணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் சைல்டு லைன் 1098 அமைப்பு ஆகியவை சார்பில், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ரயிலில் பயணிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ரயில் பயணத்தின்போது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலியல் ரீதியான பிரச்னைகள் மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்துதல், ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள் இதுபோன்ற அவசர உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவிட சைல்டு லைன் 1098 என்ற 24 மணி நேர இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட சைல்டு லைன் 1098 அமைப்பு ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் தெரிவித்தார்.
முகாமில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆற்றுப்படுத்துனர் ஜான் மோசஸ் கிரிதரன், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், காவலர்கள் கிருஷ்ண தீபா, முத்துலட்சுமி, ரயில் நிலைய மேலாளர் பாஸ்கரன், உதவி மேலாளர் லேனல் மற்றும் ரயில் பயணிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

