பேய்க்குளத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் நேரு இளையோர் மையம் , தாமரை மகளிர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய வட்டார அளவிலான விளையாட்டுபோட்டிகள் நடைபெற்றன. நேரு இளையோர் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமகாலிலிங்கம் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சமுத்திரபாண்டியன் முன்னிலை வகித்தார். சுவாமி விவேகானந்தா நற்பணி மன்றத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.
இதில் சுற்று வட்டார மாணவர், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் சமூக ஆர்வலர் காளிதாஸ், திருநெல்வேலி கேடிசிநகர் ஒபாசிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சின்னத்துரை, தாமரை மகளிர் மன்ற தலைவி சுப்புலட்சுமி ஆகியோர் பேசினர்.
வட்டார இளையோர் மன்ற நிர்வாகிகள், சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் தேசிய இளையோர் தொண்டர் சுடலைமுத்து நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை

தில்லியில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

