காயல்பட்டினத்தில் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் சபை சார்பில் உலக நன்மைக்காக அபூர்வ துஆ சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
அமைப்பின் 91ஆவது ஆண்டு விழா கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை 10.30 மணிக்கு உலக அமைதி வேண்டியும், நல்ல மழை வேண்டியும் அபூர்வ துஆ சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஹாமிதிய்யா மதரஸா சபை பேராசிரியர் காஜாமுஹ்யத்தீன் தமிழில் மொழி பெயர்த்து ஓதினார். இந்த பிரார்த்தனையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காதர் முகைதீன், கடையநல்லூர் எம்.எல்.ஏ. முஹம்மது அபூபக்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர். நேர்ச்சை விநியோகம் வியாழக்கிழமை (ஏப். 19) நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக அரசில் உடனடியாக அனைத்தையும் எதிா்பாா்த்துவிட முடியாது: நடிகை கஸ்தூரி

வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டம்

சாணாா்பதி மாரியம்மன் கோயிலில் கம்பம் திருவிழா

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


