இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

"தூத்துக்குடியில் நாளை பேச்சு, ஓவியப் போட்டி'

தூத்துக்குடியில் நூலகம் குறித்த பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி வியாழக்கிழமை (ஏப். 19) நடைபெறுகிறது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:04 am IST

தூத்துக்குடியில் நூலகம் குறித்த பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி வியாழக்கிழமை (ஏப். 19) நடைபெறுகிறது.
 இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மைய நூலகர் கொ. சங்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 உலக புத்தக தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம்  மற்றும் முத்துநகர் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான நூலகம் பற்றிய விழிப்புணர்வு பேச்சு மற்றும் ஓவியப் போட்டி வியாழக்கிழமை (ஏப். 19) மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது.
ஓவியப்போட்டியில் 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகள் கலந்துகொள்ளலாம்.  பாரதியார் மற்றும் அவருடைய எழுச்சி மிகு கவிதைகள் இரண்டு வரிகள்,  வ.உ.சிதம்பரனார் வரைபடமும் தேசிய முழக்கம் பற்றிய வரிகள் இடம் பெற வேண்டும். காந்தியடிகள் அவருடைய தத்துவ வரிகள் இரண்டு, பகத்சிங் வரைபடமும் விடுதலை பற்றிய இரண்டு வரிகளில் எழுச்சியுறைகள் மற்றும் நவீன நூலகம் வரைபடம் என்ற தலைப்புகளில் படம் இருக்க வேண்டும்.
பேச்சுப்போட்டியில் 9 ஆம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர், மாணவிகள் வரை கலந்துகொள்ளலாம். நூலகமும், கல்வித் துறையும்,  வாசித்தலும், வசித்தலும்,  கல்லூரி மாணவர்களும், நூலகமும், வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் நூல்கள் என இதில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வேண்டும்.
 போட்டியில் வெற்றி பெறும் மாணவர், மாணவிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் உலக புத்தக தின விழாவில்,  பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மைய நூலகத்தை நேரிலும்,  0461-2338977 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.