கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. 
Updated on
1 min read

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. 
கொடியேற்றத்தை முன்னிட்டு, காலையில்  திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.  அதையடுத்து, சிறப்பு பூஜைகளும், கொடிமரத்துக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. கொடியேற்று நிகழ்ச்சியை முன்னிட்டு, நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், கோயில் தர்மகர்த்தா ஆர்.ஜி.என்.மாடசாமி மற்றும் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மண்டகப்படிதாரர்கள், பொதுமக்கள் மங்களப் பொருள்களுடன் யானை முன் செல்ல, நாகசுவரம் முழங்க,  ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். 
அதை தொடர்ந்து, காலை சுமார் 6.30  மணிக்கு  கொடியேற்றப்பட்டது. பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் கொடிமரத்துக்கு மஞ்சள், பால், புனித நீர் ஊற்றினர்.  
விழாவில், நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ், செயலர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார் மற்றும் கோயில் செயலர் மாணிக்கம், பொருளாளர் கணேசன்  உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
ஏற்பாடுகளை பத்திரகாளியம்மன் திருக்கோயில் குழுவினர் மற்றும் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com