சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து நடைபயணத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை

Updated On :3 ஆகஸ்ட் 2018, 2:08 am IST

எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து நடைபயணத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை கைது செய்த போலீஸாரைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
கோவில்பட்டி தெற்கு பஜார் ஜில்விலாஸ் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட்  மாவட்டக் குழு உறுப்பினர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். நகரக் குழு உறுப்பினர் சக்திவேல்முருகன், அந்தோணிசெல்வம், ஆர்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ரயில்வே இருப்புப் பாதையை விரிவுபடுத்துவதால் பாதிப்புக்கு உள்ளாகும்  காந்திநகர், இந்திரா நகர் மக்களுக்கு அணுகுசாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து என் நிலம் என் உரிமை என்ற தலைப்பில் நடைபயணப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா, நகரச் செயலர் முருகன் ஆகியோர்  கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.