சாத்தான்குளம் அருகே விபத்தில் காயமடைந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்..
சாத்தான்குளம் அருகே உள்ள அன்பின்நகரை சேர்ந்தவர் பொ. மிகாவேல்(23), தொழிலாளி. இவர், அவரது உறவினரான பள்ளி மாணவர் கு. டேவிட் பட்டுராஜுடன்(16) ஞாயிற்றுக்கிழமை மாலை மணிநகருக்கு பைக்கில் சென்றனர். அடைக்கலாபுரம் பகுதியில் பைக் சென்றபோது சாலையில் நாய் குறுக்கே சென்றதாம். இதனால் நிலைகுலைந்த இருவரும் பைக்கில் இருந்து தவறிவிழுந்து காயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக , திருநெல்வேலி மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மிகாவேல், திங்கள்கிழமை காலை இறந்தார். டேவிட்பட்டுராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!

நீர் அருந்துவதால் இவ்வளவு பலன்களா?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல் அப்டேட்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


