தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாவை விநாடி-வினா போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற பாவை விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:01 am

DIN

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற பாவை விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி சிதம்பரநகர் சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளியில், மாவட்ட அளவிலான 18 ஆவது பாவை விநாடி-வினா போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. போட்டியை காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முரளி நடத்தினார்.   6 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள பிரிவில், சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும்,  சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி மாணவிகள் இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.  9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள பிரிவில் சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி முதலிடத்தையும்,  கமலாவதி பள்ளி மாணவிகள் இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.  
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பேராசிரியர் முரளி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.  நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் கனகராதா, துணை முதல்வர் விஜயலட்சுமி, தலைமையாசிரியை விமலா, ஆசிரியை முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.