கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் விவசாயி இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள ஆழ்வார்னேரியைச் சேர்ந்த கோவில்மணி மகன் சார்லஸ் (28). இவர் காரில் சாத்தூரிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புத்தூரையடுத்த குமாரபுரம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இடைசெவல் காலனி தெருவைச் சேர்ந்த விவசாயி தேவராஜ் (65) சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான அதே பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் முருகன்(43) காயமடைந்தார். நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் சார்லஸை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

