குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

விளாத்திகுளத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம்

விளாத்திகுளத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:10 am

DIN

விளாத்திகுளத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலர் பாண்டியன் தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் பழனிமுத்துகுமாரசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் விளாத்திகுளம் கிளைத் தலைவராக பொன்னுச்சாமி, துணைத் தலைவராக சுப்பையா, செயலராக நாராயணன், இணைச் செயலராக சுகர்ணமூர்த்தி, பொருளாளராக ராமச்சந்திரன், மாநில பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களாக குமாரசாமி, துரைராஜ் ஆகியோரும், மாவட்டக் குழு உறுப்பினர்களாக 8 பேரும், வட்ட செயற்குழு உறுப்பினர்களாக 18 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள், துறைரீதியான நடவடிக்கைகள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலன்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.