4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

செவிலியர் படிப்பு: தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் முதல் நாளில் 240  விண்ணப்பங்கள் விநியோகம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் படிப்புக்கான விண்ணப்பம் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முதல்நாளில் 240 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

Updated On :24 ஜூலை 2018, 12:56 am IST

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் படிப்புக்கான விண்ணப்பம் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முதல்நாளில் 240 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
 செவிலியர் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் உள்ள நிலையில்,  விண்ணப்பங்கள் விநியோகத்தை கல்லூரி (பொறுப்பு )முதல்வர் ராமசுப்பிரமணியன்  தொடங்கிவைத்தார். துணை முதல்வர் லூசி நிர்மல் மடோனா, நிர்வாக கல்வி அலுவலர் குமரன்,
 இளநிலை நிர்வாக அலுவலர் லதா ஆகியோர் உடனிருந்தனர்.  பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்,  மாணவிகளும், அவர்களது பெற்றோரும் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.
   இதுகுறித்து  முதல்வர்(பொ) ராமசுப்பிரமணியன் கூறியது:  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு 600 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. முதல்நாளில் 240 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகள் 106 பேரும், பொது பிரிவைச் சேர்ந்த மாணவிகள் 134 பேரும் என விண்ணப்பங்களை பெற்றச் சென்றனர். விண்ணப்பங்களை பெற்றவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.