இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தூத்துக்குடி அருகே 40 டன் கோதுமையுடன் தீப்பிடித்து எரிந்த லாரி

தூத்துக்குடி அருகே திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததால் லாரியும் அதில் இருந்த 40 டன் கோதுமையும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:04 am

DIN

தூத்துக்குடி அருகே திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததால் லாரியும் அதில் இருந்த 40 டன் கோதுமையும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடியில் உள்ள தனியார் கிடங்கில் இருந்து சுமார் 40 டன் கோதுமை மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று அருப்புக்கோட்டைக்கு புதன்கிழமை புறப்பட்டது. லாரியை தூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியைச் சேர்ந்த முருகன் (34) ஓட்டிச் சென்றார்.
தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குசாலை பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது, முன்பக்க சக்கரம் வெடித்து தீப்பற்றியதாம். இதையடுத்து, லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதையடுத்து, தூத்துக்குடியில் இருந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயை அணைத்தனர். இருப்பினும்,  லாரியும், லாரியில் இருந்த 40 டன் கோதுமையும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.