கோவில்பட்டி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
துரைச்சாமிபுரம் துணை மின் நிலையம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த தர்மராஜ் மகன் தேவராஜை (39) போலீஸார் புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 5 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருசந்திரவடிவேல் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பிரதான சாலையில் மது விற்பனையில் ஈடுபட்ட, சாஸ்திரி நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் முருகேசனை(42) கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 10 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுகாதேவி தலைமையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை கடலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மின்வாரிய அலுவலகம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட எட்டயபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அய்யப்பனை(43) கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 4 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

