குழந்தையுடன் இளம்பெண் மாயம்
கோவில்பட்டியில் ஒன்றரை வயது குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.


கோவில்பட்டியில் ஒன்றரை வயது குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி வள்ளுவர் நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் சங்கர்(30). இவருக்கும், ஆறுமுகத்தாய் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றதாம். தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகள் உள்ளார். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், மாரச் 23ஆம் தேதி குழந்தையுடன் வீட்டைவிட்டுச் சென்ற அவர் தற்போது வரை வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து சங்கர் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...