போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குரல் எழுப்பப்படும்: முகமது அபுபக்கர் எம்எல்ஏ

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குரல் எழுப்பப்படும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலரும்,

Updated On :14 மே 2018, 7:17 pm

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குரல் எழுப்பப்படும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலரும், கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினருமான முகமது அபுபக்கர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அ. குமரெட்டியாபுரம் கிராமத்தில் 92 ஆவது நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலரும், கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான முகமது அபுபக்கர் திங்கள்கிழமை கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் எழுப்பப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.