விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விநாடி-வினா போட்டியில் சாயர்புரம் கல்லூரி முதலிடம்

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் சாயர்புரம் போப்ஸ் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.

Updated On :22 அக்டோபர் 2018, 8:03 pm

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் சாயர்புரம் போப்ஸ் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.
தூத்துக்குடி வஉசி கல்லூரியில் ஏபிசி வீரபாகு அறிவியல் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள கல்லூரிகளுக்கு இடையேயான விநாடி வினா போட்டி நடைபெற்றது.
பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரிப் பேராசிரியர் ஹேயிஸ் டாசன் நடத்திய போட்டியில், 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்- மாணவிகள் கலந்துகொண்டனர்.
முதல் பரிசை சாயர்புரம் போப்ஸ் கல்லூரியும், 2ஆம் பரிசை கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், 3ஆம் பரிசை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியும் பெற்றன.
வென்றோருக்கு இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கோபி கிருஷ்ணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், மில்லர்புரம் வங்கிக் கிளை முதுநிலை மேலாளர் கார்த்திகேயன், கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு, பேராசிரியர்கள் முத்துச்சுடர்க்கொடி, முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.