செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

விநாடி-வினா போட்டியில் சாயர்புரம் கல்லூரி முதலிடம்

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் சாயர்புரம் போப்ஸ் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.

Updated On :22 அக்டோபர் 2018, 8:03 pm

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் சாயர்புரம் போப்ஸ் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.
தூத்துக்குடி வஉசி கல்லூரியில் ஏபிசி வீரபாகு அறிவியல் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள கல்லூரிகளுக்கு இடையேயான விநாடி வினா போட்டி நடைபெற்றது.
பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரிப் பேராசிரியர் ஹேயிஸ் டாசன் நடத்திய போட்டியில், 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்- மாணவிகள் கலந்துகொண்டனர்.
முதல் பரிசை சாயர்புரம் போப்ஸ் கல்லூரியும், 2ஆம் பரிசை கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், 3ஆம் பரிசை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியும் பெற்றன.
வென்றோருக்கு இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கோபி கிருஷ்ணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், மில்லர்புரம் வங்கிக் கிளை முதுநிலை மேலாளர் கார்த்திகேயன், கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு, பேராசிரியர்கள் முத்துச்சுடர்க்கொடி, முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.