தூத்துக்குடியில் திங்கள்கிழமை அதிகாலை மின்னல் தாக்கியதில் பெண் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 240 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. அதிகபட்சமாக காயல்பட்டினம் பகுதியில் 62 மி.மீ., திருச்செந்தூர் பகுதியில் 57 மி.மீ., சாத்தான்குளம் பகுதியில் 45 மி.மீ. மழை பதிவானது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 28 மி.மீ., சூரங்குடியில் 13 மி.மீ, குலசேகரன்பட்டினத்தில் 12 மி.மீ. மழை பதிவாகியது.
இந்நிலையில், தூத்துக்குடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் உப்பளத் தொழிலாளி சேர்மபாண்டி (37) வீட்டில் மின்னல் தாக்கியது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சேர்மபாண்டி, அவரது மனைவி தேவிகா (32), மகள்கள் கீர்த்தனா(11), பிருந்தா (7) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தேவிகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மூவரும் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

