புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சபரிமலை விவகாரம்: "நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வந்து சபரிமலையின் புனிதம் காக்க வேண்டும்'

நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வந்து சபரிமலையின் புனிதம் காக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார்.

Updated On :22 அக்டோபர் 2018, 3:04 am

நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வந்து சபரிமலையின் புனிதம் காக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் புனிதத்தை காக்க வலிலியுறுத்தியும், கேரள அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் இந்து மக்கள் கட்சியினர் ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இதில் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், மாநில பொதுச் செயலாளர் வசந்தகுமார், மாவட்டத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆறுமுகனேரி ரயில் நிலையம் முன்பு அவர்களை ஆறுமுகனேரி காவல்துறை ஆய்வாளர் கணேஷ்குமார், உதவி ஆய்வாளர் மாடசாமி ஆகியோர்  மறித்து கைது செய்தனர்.
அப்போது அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயில் புனிதத்தை காக்க வலியுறுத்தியும், ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி நடத்திய கேரள அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் ரயில் மறியல் போராட்டம் நடத்த வந்தோம்.
சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதாக கூறுகிறார்கள். எந்தத் தீர்ப்பையும் உடனடியாக அமல்படுத்த முடியாது. மறுசீராய்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அங்குள்ள கம்யூனிஸ்ட்  அரசு, மக்களுக்கு எதிராக அனைத்தையும் செய்துள்ளது. சபரிமலையில் பக்தர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 
நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வந்து சபரிமலை புனிதம் காக்க வேண்டிய எற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார்அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.