அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

உடன்குடி, சாத்தான்குளம் பகுதி குளங்கள் நிரம்பும் வரை சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்: அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை

உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் உள்ள நான்கு குளங்களும் முழுமையாக நிரம்பும் வரை சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்துவிட  வேண்டும் என அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:58 pm

உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் உள்ள நான்கு குளங்களும் முழுமையாக நிரம்பும் வரை சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்துவிட  வேண்டும் என அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூர் சட்டபேரவை உறுப்பினருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,  உடன்குடி ஒன்றியத்துக்குள்பட்ட ராமசுப்பிரமணியபுரத்தில் சடையனேரி  கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் ஆண்டுக்காண்டு  பருவமழை குறைந்துகொண்டே வந்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துகொண்டே சென்றது. இதனால் கடல் நீர் உள்புகுந்ததால் விவசாய நிலங்கள் அனைத்தும் பாழானது.
தூத்துக்குடி மாவட்டத்திலேயே உடன்குடி  ஒன்றியத்தில்தான்  நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கொண்டே போவதாக மத்திய நிலத்தடி நீர் மேம்பாட்டு வாரியம்  எச்சரித்துள்ளது. 
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வீணாகக் கடலில் கலக்கும் நீர், தற்போது சடையனேரி கால்வாயில் திறந்துவிடப்பட்டுள்ளது.  உடன்குடி ஒன்றியத்தில் உள்ள தாங்கைக்குளம், சடையனேரி குளம்,  சாத்தான்குளம் ஒன்றியத்தில் புத்தன்தருவைக்  குளம், வைரவன்குளம் ஆகியவை முழுமையாக நிரம்பும் வரை இக்கால்வாயில் தண்ணீர் விட வேண்டும் என குறிப்பட்டார்.
மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஒன்றியச் செயலர்கள் பாலசிங் (உடன்குடி), ரமேஷ் (திருச்செந்தூர்), ஊராட்சிச் செயலர்கள் க.இளங்கோ (பரமன்குறிச்சி), ஜெரால்டு தனராஜ் (மெஞ்ஞானபுரம்), முருகேசன் (செம்மறிக்குளம்), மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், கிளைச் செயலர்கள் சித்திரைபாண்டி, ராமச்சந்திரன், சந்திரவேல் ஆகியோர்  உடன் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.