கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர், மாணவிகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், குருவிகுளம் ஊரக வளர்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்திய தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியை கல்லூரி முதவ்வர் சு.கிருஷ்ணசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துபாண்டி, மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணி, அப்பனேரி கிராமத்தை சென்றடைந்தது.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி ஆகியோர் தூய்மை மற்றும் நெகிழியினால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பேசினர்.
ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மகேஷ்குமார், கவிதா மஞ்சு ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

