தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக பதிவு செய்ய வலியுறுத்தி, துண்டுப் பிரசுரம் விநியோகம் மற்றும் மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன் நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலியில், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பரமசிவன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், உதவியாளர் கோவிந்தராஜ், கல்லூரி முதல்வர் சண்முகவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சியை, கோட்டாட்சியர் தலைமை வகித்து, தொடங்கிவைத்தார். வட்டாட்சியர் பரமசிவன், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள வியாபாரிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில், தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ், அறக்கட்டளை பொறுப்பாளர்கள் சேர்மராஜன், அய்யப்பசாமி, முத்துமாரியப்பன், ராமசுப்பிரமணியன், கார்த்திகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









