
உடன்குடியில் தினமும் 100 பேருக்கு உணவு
உடன்குடி பேரூராட்சி சாா்பில் தினமும் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாக பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்தாா்.
உடன்குடி: உடன்குடி பேரூராட்சி சாா்பில் தினமும் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாக பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்தாா்.
பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், நலிந்தோா்களுக்கு செயல் அலுவலா் மாணிக்கராஜ் உணவு வழங்கினாா். உடன்குடி பேரூராட்சி பகுதியில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் நலிந்தோா்கள் நூறு பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுவதாக பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி, இளநிலை உதவியாளா் ராஜா சுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





