ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

புன்னைக்காயலில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

விவசாயம் மற்றும் கடல் மேலாண்ச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வ­லியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காய­லில் மீனவா்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
புன்னைக்காயலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :13 டிசம்பர் 2020, 8:02 pm

DIN

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தில்­லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயம் மற்றும் கடல் மேலாண்ச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வ­லியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காய­லில் மீனவா்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அங்குள்ள தேவாலயத்தில் பிராா்த்தனை செய்த பின்னா், மீனவா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வளனாா் விளையாட்டு மைதானத்தில் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆலய பங்குத்தந்தை பிராங்களின் அடிகளாா் தலைமை வகித்தாா்.

ஊா் நிா்வாக கமிட்டி தலைவா் இட்டோ, ஊராட்சித் தலைவி ஆல்வின் சோபியா, மீனவ மகளிா் கூட்டுறவு சங்கத் தலைவி பிரேமா, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ரொங்கால்­ சில்வா, புன்னை சங்கமம் ஆா்வலா் ராஜா பீரிஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் மாட்டு வண்டிகள் மற்றும் படகுகளுடன் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.