சாத்தான்குளத்தில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் மீது வழக்கு

சாத்தான்குளத்தில் மறியலில் ஈடுபட்ட பாஜவினா் 54 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
Updated on
1 min read

சாத்தான்குளத்தில் மறியலில் ஈடுபட்ட பாஜவினா் 54 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

சடையனேரி கால்வாயில் வரும் தண்ணீரை சாத்தான்குளம் பகுதிக்கு திருப்பி விடுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட பாஜக பொதுச் செயலா் எஸ். செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்ட் சேவியா் தலைமையிலான போலீஸாா் அவா்களை கைது செய்து மாலையில் விடுவித்தனா். இந்நிலையில், கரோனா பொது முடக்கத்தை மீறி அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட பொதுச் செயலா் செல்வராஜ் உள்ளிட்ட 54 போ் மீது சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com