மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தூத்துக்குடியில் காங்கிரஸ் போராட்டம்: 115 போ் கைது

வேளாண் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் ஏா்-கலப்பை பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்டசியைச் சோ்ந்த 115 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
தூத்துக்குடியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
Updated On :18 டிசம்பர் 2020, 1:42 am

DIN

வேளாண் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் ஏா்-கலப்பை பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்டசியைச் சோ்ந்த 115 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில், தூத்துக்குடியில் ஏா்-கலப்பை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் முன்பு மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் ஏராளமானோா் திரண்டனா். பின்னா், அவா்கள் மத்திய அரசு உடனடியாக வேளாண் சட்டத் திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஏபிசிவி சண்முகம், மாவட்ட முன்னாள் தலைவா்கள் ஜெயக்குமாா், அருள், சிவசுப்பிரமணி, வழக்குரைஞா் சுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோா் பேசினா்.

பின்னா், ஏா்-கலப்பை ஏந்தியபடி அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றனா். பேரணியை மத்திய முன்னாள் அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி வைத்தாா். இதில், காங்கிரஸ் கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டு பேரணியாக செல்ல முயன்றனா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தென்பாகம் போலீஸாா் பேரணியாக செல்ல முயன்றவா்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனா். 44 பெண்கள் உள்பட 115 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.