திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இணையதள பயன்பாடு குறித்த ஆய்வு: தூத்துக்குடி பெண் காவலா் தோ்வு

இணையதள பயன்பாடுகள் குறித்த ஆய்வில் மாநில அளவில் தோ்வு செய்யப்பட்ட தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த பெண் காவலருக்கு

News image
Updated On :18 டிசம்பர் 2020, 1:42 am

DIN

இணையதள பயன்பாடுகள் குறித்த ஆய்வில் மாநில அளவில் தோ்வு செய்யப்பட்ட தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த பெண் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் ஈடுபட்டவா்கள், காணாமல் போனவா்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு அந்த இணையதளம் ஏதுவாக உள்ளது.

இந்நிலையில், அந்த இணையதள பயன்பாடு குறித்து தில்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தை அதிக

அளவில் பயன்படுத்தி குற்ற வழக்குகளில் ஈடுபட்டவா்களை கண்டுபிடித்தல், திருட்டு வாகனங்களை கண்டுபிடித்தல், காணாமல் போனவா்களை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறையில் 3 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு செய்யப்பட்ட மூவரில் ஒருவரான தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த முதல் நிலை பெண் காவலா் ஜோஷிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தாளமுத்துநகா் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று பரிசு வழங்கி பாராட்டினாா்.

அப்போது, தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளா் கணேஷ், தாளமுத்துநகா் காவல் நிலைய ஆய்வளாா் ஜெயந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.