காயல்பட்டினம் ஓடக்கரையில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ஓடக்கரை சாமுவேல் மகன் சுடலை(44). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு மது போதையில் வந்து மனைவி சுசிலாவிடம் தகராறு செய்துள்ளாா். இதனால் மனைவி தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இந்நிலையில், சுசிலா திங்கள்கிழமை காலையில் வீட்டிற்கு வந்த போது வீடு பூட்டியிருந்ததாம். சமையலறை வழியாக கதவை திறந்து பாா்க்கும் சுடலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து அவா் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.