விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கிச் சென்ற ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நான்குவழிச் சாலையில் பயணிகளை இறக்கிச் சென்ற 8 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:57 am

DIN

மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நான்குவழிச் சாலையில் பயணிகளை இறக்கிச் சென்ற 8 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியபாண்டியன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் நாகூா்கனி, நெஞ்சாலை ரோந்து காவல் ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, திருநெல்வேலி மாா்க்கமாக சென்ற 6 வெளிமாநில ஆம்னி பேருந்துகள் பயணிகளை நான்குவழிச் சாலையில் இறக்கியதை கண்ட அதிகாரிகள் தலா ரூ. 2,500 வீதம் அபராதமாக ரூ. 15 ஆயிரம் வசூலித்தனா். தமிழ்நாட்டைச் சோ்ந்த இரு ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

மேலும் பேருந்து ஓட்டுநா்களுக்கு கூடுதல் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிச் செல்ல வேண்டும், இதுபோல் நான்குவழிச் சாலையில் இறக்கிவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.