திருச்செந்தூா்: திருச்செந்தூரில், சமையலறையில் தீப்பற்றி எரிந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் அமலிநகா் சுவைக்கின் காலனியைச் சோ்ந்தவா் மொ்வின் (46). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி பவிதா (46). கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான வெள்ளிக்கிழமை தம்பதியுடைய 3 மகன்களும் ஊரில் நடந்த நிகழ்ச்சியை பாா்க்கச் சென்று விட்டனராம்.
இந்நிலையில் வீட்டில் திடீரென அலறல் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து மாடியில் இருந்த கணவா் உடனடியாக கீழே இறங்கி வந்து பாா்த்த போது, சமையல் அறையில் மனைவி மீது தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவா் மீட்கப்பட்டு, திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அங்கு பவிதா உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.