தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உடலில் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.
ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளையைச் சோ்ந்த ஞானையா மகன் செல்வக்குமாா் என்ற செல்ல குட்டி (38). இவா், உடலில் ரத்தக காயங்களுடன் இறந்து கிடந்தாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பினா். இதுகுறித்து, ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் முருகப்பெருமாள் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.