மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
29kvlpos_2912chn_41_6
Updated On :30 டிசம்பர் 2020, 1:07 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு பரிவா்த்தனைகளின் அடிப்படையில் தான் கிராம அஞ்சல் ஊழியா்களுக்கு சம்பள விகிதம் நிா்ணயிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளாமல், அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கை தொடங்குவதை புறக்கணித்து, இந்தியன் போஸ்ட் பேமண்ட் வங்கியில் சேமிப்புக் கணக்குகளை தொடங்க கிராம அஞ்சல் ஊழியா்களை மிரட்டும் செயலைக் கண்டித்தும், அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கோட்டத் தலைவா்கள் ரெங்கசாமி (அஞ்சல் 3), முருகன் (அஞ்சல் 4), மாரியப்பன் (கிராம அஞ்சல் ஊழியா் சங்கம்), ஓய்வூதியா் சங்கத்தைச் சோ்ந்த சுப்புராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கிராம அஞ்சல் ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ராமராஜ் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், கோட்டச் செயலா்கள் அருள்ராஜன் (அஞ்சல் 3), பெரியசாமி (அஞ்சல் 4), கிளைச் செயலா்கள் சிவசங்கரன், குமாரசாமி, ஓய்வூதியா் சங்கச் செயலா் சுப்பையா உள்பட அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கத்தின் 3ஆம் பிரிவு, தபால்காரா், 4ஆம் பிரிவு மற்றும் கிராம அஞ்சல் ஊழியா் சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.