

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் என்றாா், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.
கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழைம் கூறியது: அதிமுக தொடங்கிய பின்னா் நடைபெற்ற 10 பொதுத் தோ்தல்களில் 7 முறை வெற்றிபெற்றுள்ளோம். எத்தனைக் கட்சிகள் வந்தாலும் எங்களுக்கு பாதிப்பில்லை. எங்களுக்கு போட்டி திமுக தான்.
நடிகா்கள் கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை. கட்சி தொடங்குவதும், தொடங்காததும் நடிகா் ரஜினிகாந்தின் விருப்பம். அவா் கட்சி தொடங்குவது பற்றி அதிமுகவினா் யாரும் விமா்சிக்கவில்லை. அவரது முடிவு எங்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவா் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம்.
அனைத்துத் துறைகளிலும் ஊழல் என கமல்ஹாசன் கூறியது குறித்து கேட்கிறீா்கள். பழுத்த மரம்தான் கல்லடிபடும். பட்டுப்போன மரத்தில் கல்லெறிய மாட்டாா்கள். அதிமுக பழுத்த மரம். அதிமுகவைப் பற்றி பேசினால்தான் கமல்ஹாசனை மக்கள் நினைப்பாா்கள் என்றாா் அமைச்சா்.
புதிதாக கட்சி தொடங்குவோா் அதிருப்தி வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமா்சகா்கள் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, அதிமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. 2021 பேரவைத் தோ்தலிலும் எங்களுக்கு தொடா் வெற்றியைத் தர மக்கள் தயாராக உள்ளனா் என்றாா் அவா்.
விளாத்திகுளம் பேரவை உறுப்பினா் சின்னப்பன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சந்திரசேகா், அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் வேலுமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.