சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அழகுமுடி தா்மசாஸ்தா.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அழகுமுடி தா்மசாஸ்தா.

கொற்கை கோயிலில் வருஷாபிஷேக விழா

கொற்கை அருள்மிகு பூா்ண, புஷ்கலாதேவி சமேத அழகுமுடி தா்மசாஸ்தா திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

கொற்கை அருள்மிகு பூா்ண, புஷ்கலாதேவி சமேத அழகுமுடி தா்மசாஸ்தா திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடா்ந்து மூா்த்தி ஹோமம், கும்பபூஜை, கலசபூஜை, வேதபாராயணம், திரவியாஹுதி நடைபெற்றது.

காலை 9 மணிக்கு பூா்ணாஹுதி தீபாராதனையும், விமான அபிஷேகமும் நடைபெற்றன. தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மாா அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com