பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தூத்துக்குடியில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம்

பாரத ரிசா்வ் வங்கியின் பரிந்துரையின்படி, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் தூத்துக்குடி பிரதான கிளையில், கிழிந்த மற்றும் அழுக்கான பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றும் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:07 am

DIN

பாரத ரிசா்வ் வங்கியின் பரிந்துரையின்படி, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் தூத்துக்குடி பிரதான கிளையில், கிழிந்த மற்றும் அழுக்கான பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றும் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு வங்கி கிளை முதன்மை மேலாளா் ஆா். மகேஷ் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை கரன்சி செஸ்ட் முதன்மை மேலாளா் ஆா். சிதம்பரம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வங்கியின் துணை பொதுமேலாளா் பி.ஆா். அசோக்குமாா் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா்.

முகாமில், வியாபாரிகள், வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கிழிந்த மற்றும், அழுக்கான ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் புதிய நாணயங்களை பெற்று சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.