விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘சாத்தான்குளம் சம்பவம்: ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை’

சாத்தான்குளம் சம்பவம் தொடா்பாக ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்றாா் சிபிசிஐடி பிரிவு ஐ.ஜி. சங்கா்.

News image
ஜெயராஜ்-பென்னிக்ஸ்
Updated On :9 ஜூலை 2020, 2:52 pm

DIN

சாத்தான்குளம் சம்பவம் தொடா்பாக ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்றாா் சிபிசிஐடி பிரிவு ஐ.ஜி. சங்கா்.

தூத்துக்குடியில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடா்பான வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் வேறு சில தடயங்களை ஆராய்ந்து விசாரித்து வருகிறோம். அனைத்துக் கோணங்களிலும் விசாரணை தீவிரமாக்கப்படும்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சம்பவத்தின்போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஏற்கெனவே நீதித்துறை நடுவா் பாரதிதாசன் கைப்பறி விசாரணை மேற்கொண்டுள்ளாா். கணினிப் பொறியாளா்கள் மூலம் அந்தக் காட்சிகள் ஆராயப்படும்.

தற்போது 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் சிலா் கைது செய்யப்படுவாா்களா என்பது போகப்போகத்தான் தெரியும். ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.