எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குரும்பூரில் மதுவில் விஷம் கலந்து குடித்து 2 இளைஞர்கள் தற்கொலை 

குரும்பூரில் மதுவில் விஷம் கலந்து குடித்து 2 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 

News image
Updated On :1 ஜூன் 2020, 5:45 am

DIN

குரும்பூரில் மதுவில் விஷம் கலந்து குடித்து 2 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் யோகரத்தினம் நகர் வடக்கு தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் அஜித்குமார் ( 21). பொன்ராஜின் சகோதரி ராஜேஸ்வரி மகன் தூசி முத்து (18). இவர்கள் இருவரும் நேற்று மாலை வீட்டில் இருந்த போது மது அருந்தியதாக கூறப்படுகிறது. அந்த மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி நிலையில் இருந்துள்ளனர். 

தூசி முத்து வீட்டிலேயே உயிரிழந்ததாகவும், அஜித் குமார் சிறிது தூரம் தொலைவில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. வேலைக்கு செல்லவில்லை என பெற்றோர் திட்டியதால் அவர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.