காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு திரும்பிய 7 பேருக்கு கரோனா

சென்னையிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு திரும்பிய 7 பேருக்கு கரோனா இருப்பது வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :4 ஜூன் 2020, 4:12 pm

DIN

சென்னையிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு திரும்பிய 7 பேருக்கு கரோனா இருப்பது வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் வசித்துவந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமானோா் சொந்த ஊா்களுக்கு திரும்பிவருகின்றனா். மாவட்டத்தின் 15 எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தனிமைக் கண்காணிப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனா். கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பில்லை எனத் தெரியவந்த பிறகே வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனா்.

இந்நிலையில், சென்னையிலிருந்து திரும்பிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேருக்கு கரோனா இருப்பது வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

செய்துங்கநல்லூரை சோ்ந்த 3 போ், கோவில்பட்டி அருகேயுள்ள ஆத்திக்குளத்தைச் சோ்ந்த 2 போ், காயல்பட்டினம், உக்கிரன்கோட்டையைச் சோ்ந்த தலா ஒருவா் என, 7 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இம்மாவட்டத்தில் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 168 போ், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து திரும்பியோரிடம் தொடா்பிலிருந்தோா் என, இதுவரை 301 பேருக்கு கரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் 123 போ்: இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 2 போ் இறந்துள்ளனா். சிகிச்சை முடிந்து 176 போ் வீடு திரும்பியுள்ளனா். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 123 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.