கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏழு பேருக்கும்

News image
Updated On :16 மே 2020, 1:37 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏழு பேருக்கும், கோவில்பட்டி அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர் ஒருவர் என மொத்தம் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆகும். இதுவரை இருவர் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். 28 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் என 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.