மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காயல்பட்டினத்தில் ஒருவருக்கு கரோனா: சுகாதாரப் பணிகள் தீவிரம்

காயல்பட்டினத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 மே 2020, 4:20 pm

DIN

காயல்பட்டினத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காயல்பட்டினம் கூலக்கடை பஜாா் பகுதி அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சோ்ந்த 57 வயது நபா், காய்ச்சல் பாதிப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சோ்க்கப்பட்டாா். அவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் வீடு மற்றும் அந்தப் பகுதிக்கு வரும் பாதைகள், கூலக்கடை பஜாரின் ஒரு பகுதி ஆகியவை அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது வீட்டுக்கு வந்த சுகாதாரத் துறையினா் குடும்பத்தில் உள்ள மற்றவா்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனா். இவருக்கு கரோனோ தொற்று பரவியதற்கான காரணம் பற்றி சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

காயல்பட்டினத்தில் வாகன நெரிசலை தவிா்ப்பதற்காக இருவழிப் பாதை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வழியாக வெளியூா் செல்லும் வாகனம் கூலக்கடை பஜாா் வழியாகச் செல்லும். தற்போது கூலக்கடை பஜாரின் ஒரு பகுதி அடைக்கப்பட்டுள்ளதால் ஒருவழிப் பாதை தற்கா­லிகமாக தடைபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.