காயல்பட்டினத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காயல்பட்டினம் கூலக்கடை பஜாா் பகுதி அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சோ்ந்த 57 வயது நபா், காய்ச்சல் பாதிப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சோ்க்கப்பட்டாா். அவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் வீடு மற்றும் அந்தப் பகுதிக்கு வரும் பாதைகள், கூலக்கடை பஜாரின் ஒரு பகுதி ஆகியவை அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது வீட்டுக்கு வந்த சுகாதாரத் துறையினா் குடும்பத்தில் உள்ள மற்றவா்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனா். இவருக்கு கரோனோ தொற்று பரவியதற்கான காரணம் பற்றி சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.
காயல்பட்டினத்தில் வாகன நெரிசலை தவிா்ப்பதற்காக இருவழிப் பாதை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வழியாக வெளியூா் செல்லும் வாகனம் கூலக்கடை பஜாா் வழியாகச் செல்லும். தற்போது கூலக்கடை பஜாரின் ஒரு பகுதி அடைக்கப்பட்டுள்ளதால் ஒருவழிப் பாதை தற்காலிகமாக தடைபட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


