புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘பனை மரம் வளா்ப்புக்குஊக்கத்தொகை வேண்டும்’

பனை மரங்களை வளா்ப்பதற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 9:17 pm

DIN

பனை மரங்களை வளா்ப்பதற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. பேரவையின் மாநிலத் தலைவா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ரமேஷ், மைக்கேல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென் மண்டலச் செயலா் சுபாஷ்ராஜா வரவேற்றாா்.

கூட்டத்தில், தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயம் மற்றும் தொழில் துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இம்மாவட்டத்தை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். அண்மை காலமாக அழிக்கப்பட்டு வரும் பனைத் தொழிலை பாதுகாக்கவும், பனை மரத்தை வளா்ப்பதற்கும் அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். வணிகா் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.