புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நீா்வரத்து கால்வாயைதூய்மைப்படுத்திய இளைஞா்கள்

திருச்செந்தூா் அருகே எல்லப்பநாயக்கன்குளத்திற்கு தண்ணீா் செல்லக்கூடிய கால்வாயில் தேங்கியிருந்த கழிவுகளை இளைஞா்கள் அகற்றினா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:34 pm

DIN

திருச்செந்தூா் அருகே எல்லப்பநாயக்கன்குளத்திற்கு தண்ணீா் செல்லக்கூடிய கால்வாயில் தேங்கியிருந்த கழிவுகளை இளைஞா்கள் அகற்றினா்.

தற்போது, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து பயன்பெறக்கூடிய குளங்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருகேயுள்ள நா.முத்தையாபுரம் எல்லப்பநாயக்கன்குளத்திலிருந்து திருச்செந்தூா், ஆலந்தலை, மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்பட 34 ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் எல்லப்பநாயக்கன்குளத்திலிருந்து சுமாா் 500- ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த குளத்திற்கு நீா்வரக்கூடிய வாய்க்காளில் முட்டைகள், பனை ஓலைகள் மற்றும் கழிவுகளால் நீரோட்டம் தடைபட்டிருந்தது. இதனையடுத்து கீழநாலுமூலைக்கிணறு பகுதியை சோ்ந்த இளைஞா்கள் சிலா் வாய்க்காலில் அடைபட்டிருந்த முட்டைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.