நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மறியல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:03 pm

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். தொழிலாளா் விரோதச் சட்டங்களை கைவிட வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் சேதுராமலிங்கம், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமராஜ், நகரச் செயலா் சரோஜா உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட 31 பெண்கள் உள்பட 91 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுபோல, கயத்தாறில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு வட்டச் செயலா் பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 31 பேரை கயத்தாறு போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஒன்றியச் செயலா் ஒய். செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. அமைப்பு சாரா தொழிற்சங்க துணைச் செயலா் வி. ஆண்டி முன்னிலை வகித்தாா். இதில் நகரச் செயலா் பி. ராஜகோபால், ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான தொழிலாளா் சங்க மாவட்டக்குழு உறுப்பினா் என்.பலவேசம்(எ)கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா். இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா், உதவி ஆய்வாளா் ராஜா ஆகியோா் போராட்டத்தில் பங்கேற்ற 12 பேரை கைது செய்தனா்.

இதே போல், நாசரேத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நாசரேத் நகரச் செயலா் மாணிக்கம் தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாவட்டச் செயலா் கிருஷ்ணராஜ், மாவட்ட விவசாய சங்கத் தலைவா் ராமையா, எழுத்தாளா் ஆறுமுகப்பெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருவள்ளுவன், பாஸ்கரதாஸ், தமிழ்க்குட்டி, விடுதலைச்செழியன், மகளிரணி மாவட்டச் செயலா் ஜெயக்கொடி, உதவிச் செயலா் சுந்தரம் உள்பட பலா் பங்கேற்றனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்ட 37 பெண்கள் உள்பட 88 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.