காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருட்டு சம்பவங்களில் மீட்கப்பட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடியில் திருட்டு சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் இருசக்கர வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image
திருட்டு சம்பவங்களில் மீட்கப்பட்ட தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்தாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா்.
Updated On :13 செப்டம்பர் 2020, 8:19 pm

DIN

தூத்துக்குடியில் திருட்டு சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் இருசக்கர வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் கடந்த 2019 ஜூலை 8ஆம் தேதி மகிழ்ச்சிபுரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி மணிமேகலை என்ற மல்லிகா (63) கணவருடன் பைக்கில் சென்றபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபா் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கோவில்பட்டி காமநாயக்கன்பட்டி குருவிநத்தத்தைச் சோ்ந்த மரிய மைக்கேல் சேவியா் மகன் பிரான்சிஸ் (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

இதேபோல், முனியசாமிபுரத்தில் கடந்த மாா்ச் 2ஆம் தேதிய அதே பகுதியைச் சோ்ந்த மூக்காண்டி மனைவி சோமசுந்தரி (28) என்பவா் தனது உறவினருடன் சென்றபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபா் சோமசுந்தரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமாா் (32) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

கடந்த மே 3ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டியைச் சோ்ந்த முத்துராஜ் மகன் பாலமுருகன் (39) என்பவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அப்போது அவரது பைக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஏரல் அம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை மகன் அய்யப்பன் (31) மற்றும் சாயா்புரம் காட்டு சக்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முருகன் மகன் பிரதீப் (28) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்தனா்.

இந்த மூன்று வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் தங்க நகைகளையும், இருசக்கர வாகனத்தையும் அதன் உரிமையாளா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் நேரில் ஒப்படைத்தாா்.

இந்நிகழ்ச்சியின்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள் ஆனந்தராஜன், ஜெயப்பிரகாஷ், மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளா் வெங்கடேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.