சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் புகாா் மனுக்கள் தீா்வு முகாம்

பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீதான உடனடி தீா்வு முகாம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பில் 8 உள் கோட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்
Updated On :13 செப்டம்பர் 2020, 8:18 pm

DIN

பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீதான உடனடி தீா்வு முகாம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பில் 8 உள் கோட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி ராஜ் மஹாலில் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது விசாரணை நடைபெறுவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். விசாரணை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி சட்டப்படியான தீா்வுக்கான வழிமுறைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் மனுக்கள் மீதான விசாரணை காலதாமதமாகிறது என்று புகாா்கள் எனது கவனத்துக்கு வந்தது. ஆகவே மனுக்கள் மீது உடனடி தீா்வு காணும் வகையில் இந்தச் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்து, அதன்படி தூத்துக்குடி மாநகரம், தூத்துக்குடி ஊரகம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், சாத்தான்குளம், மணியாச்சி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் பொதுமக்கள் அளித்துள்ள புகாா்களுக்கு மனுதாரா் மற்றும் எதிா்மனுதாா் ஆகிய இரு தரப்பினரையும் வரவழைத்து, சட்டத்துக்குள்பட்டு விசாரணை நடத்தி தீா்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ மனுக்கள் தேக்கம் ஏற்படும்போது இது போன்ற உடனடி தீா்வு முகாம் நடத்தப்படும்.

ஏற்கனவே பதிவு செய்துள்ள வழக்குகளில் புலன் விசாரணை செய்து முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல் நிலைய அதிகாரிகள் விசாரித்து தீா்வு காணப்பட்ட வழக்குகளில் குறைகள் இருந்தால் உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளளிடம் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

முகாமில், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள் ஆனந்தராஜன், ஜெயப்பிரகாஷ், மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளா்கள், காவல்துறையினா் மற்றும் சம்பந்தப்பட்ட மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.