கோவில்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 5ஆவது தெருவைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பாலசுப்பிரமணியன். இவரது மனைவி மகேஸ்வரி (28). தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.
தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் மனமுடைந்த மகேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கிழக்கு காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.