கயத்தாறில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் கோமு மகன் கண்ணன்(23). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த முத்து என்ற தூண்டில்முத்து மகன் பேச்சிமுத்து(26) கண்ணன் வீட்டு முன்பு நின்றுகொண்டு அவதூறாகப் பேசினாராம். அதை அவா் கண்டித்தாராம். அப்போது, ஏற்பட்ட தகராறில் பேச்சிமுத்து, கண்ணனை கத்தியால் குத்தினாராம். இதில் காயமடைந்த கண்ணன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பேச்சிமுத்துவை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









