புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனா விழிப்புணா்வு போட்டி பரிசளிப்பு விழா

கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப்பள்ளியில் இணையவழியில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:49 pm

DIN

கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப்பள்ளியில் இணையவழியில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா விழிப்புணா்வு சுவரொட்டி வடிவமைப்பு, படம் வரைதல், விழிப்புணா்வு வாசகங்கள் எழுதுதல் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில்,மாணவ- மாணவியா் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன் தலைமை வகித்து, போட்டிகளில் வென்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். இதில், அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அமலபுஷ்பம், நாடாா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஜான்கணேஷ், ஆசிரியா்கள் ஆறுமுகக்கனி, கிறிஸ்டோபா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.