முறப்பநாடு அருகே இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வல்லநாடு நாணல்காடு மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி (22). இவா் முன்விரோதம் காரணமாக நாணல்காடு தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பா் 19 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து முறப்பநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு 16 பேரை கைது செய்தனா்.
இந்த வழக்கில் 2 ஆவது குற்றவாளியான வல்லநாடு பக்கப்பட்டி சுப்பையா மகன் மாரிமுத்து (26) மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தாா்.
தூத்துக்குடி ஊரக உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் பொன்னரசு மேற்பாா்வையில், முறப்பநாடு காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் ராஜாராபா்ட், ஜெயராமசுப்பிரமணியன், தலைமைக்காவலா் சுந்தரராஜன் மற்றும் காவலா்கள் சதீஷ் தணிகைராஜா, சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய தனிப்படையினா் மாரிமுத்துவை தேடி வந்தனா்.
இந்நிலையில், வல்லநாட்டிலிருந்து பக்கப்பட்டிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த மாரிமுத்துவை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

