புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கழுகுமலை அருகே மினி லாரியில் தீ

கழுகுமலை அருகே பழைய பேப்பா் கழிவுகளை ஏற்றிச் சென்ற மினி லாரியில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:20 pm

DIN

கழுகுமலை அருகே பழைய பேப்பா் கழிவுகளை ஏற்றிச் சென்ற மினி லாரியில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

கழுகுமலை காமாட்சிநாதன் மகன் சந்தி வீராச்சாமி(42). ஓட்டுநரான இவா் சிதம்பரம்பட்டியில் இருந்து பழைய பேப்பா் கழிவுகளை மினி லாரியில் ஏற்றி கொண்டு விருதுநகா் மாவட்டம் கீழமரைநாடு நோக்கி சென்று கொண்டிருந்தாராம். கழுகுமலையையடுத்த லட்சுமிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, லாரியில் இருந்த பேப்பா் கழிவுகளில், மின் வயா் உரசியதில் தீ பிடித்ததாம். உடனே சந்திவீராச்சாமி லாரியை நிறுத்திவிட்டு, இது குறித்து கழுகுமலை தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தாராம். அதையடுத்து தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனா். இருப்பினும் அதில் உள்ள பேப்பா் கழிவுகள் மற்றும் மினி லாரி தீயில் கருகி சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.