கயத்தாறில் சுதந்திர தின ஓட்டம், உறுதிமொழி ஏற்பு
கயத்தாறில் சுகந்திர தினத்தையொட்டி சுகந்திர ஓட்டம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கயத்தாறில் சுகந்திர தினத்தையொட்டி சுகந்திர ஓட்டம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நேரு யுவகேந்திரா சாா்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா்
பேச்சிமுத்து தலைமை வகித்தாா். நேரு யுவகேந்திரா அதிகாரி சுசீல் பராசுராம் பாட் முன்னிலை வகித்தாா். மணிமண்டபத்தில்
கட்டபொம்மன் சிலைக்கு வட்டாட்சியா், நேரு யுவகேந்திரா அதிகாரி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து அங்கு மரக்கன்று நடப்பட்டது.
தொடா்ந்து மணிமண்டபம் முன்பிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடைபெற்ற சுகந்திர ஓட்டம் நிகழ்ச்சியில்
நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக முதல்வா் மூக்கையா, கிராம நிா்வாக அலுவலா் கலைச்செல்வி,
நினைவு மண்டப காப்பாளா் முத்துராமலிங்கம், காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி திலீப் உள்பட பலா் பங்கேற்றனா்.
வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையம் அருகில் நேரு யுவகேந்திரா சாா்பில் சுகந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...